செய்திகள் :

ஹார்திக் பாண்டியாவுடன் மோதல்: சாய் கிஷோர் கூறியதென்ன?

post image

மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று இரவு (மார்ச்.29) அஹமதாபாத்தில் மோதியது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் அடிக்க அடுத்து விளையாடிய மும்பை 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஓவரில் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியாவுடன் குஜராத் அணி வீரர் சாய் கிஷோர் மோதலில் ஈடுபட்டார்கள்.

15ஆவது ஓவரில் முதலிரண்டு பந்துகளில் ரன்களேதுமின்றி இருக்க 3ஆவது பந்தில் பாண்டியா பவுண்டரி அடிப்பார்.

4ஆவது பந்தினை டாட் செய்யவும் இருவரும் முறைக்க ஆரம்பித்தனர்.

ஹார்திக் பாண்டியாவும் சாய் கிஷோரும் ஒருவரை ஒருவர் முன்னோக்கி வர நடுவர் இருவரையும் பிரிக்க ஓடி வருவார்.

அதற்குள்ளாக ஹார்திக் பாண்டியா சாய் கிஷோரை ”கிளம்பு” என்பதுபோல சைகை காண்பிப்பார். அதற்கு சாய் கிஷோர் முறைத்துக்கொண்டே இருப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்த பிறகு இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

இது குறித்து போட்டி முடிந்தபிறகு சாய் கிஷோர் பேசியதாவது:

ஹார்திக் எனக்கு நல்ல நண்பர். களத்தினுள் அப்படித்தான் இருப்போம். ஆனால், இதை தனிப்பட்ட விதத்தில் எடுத்துச்செல்ல மாட்டோம்.

இன்று எனக்கு பெரிதாக அழுத்தம் இல்லை. அதனால், தற்காக்கும் விதமாகவே பந்தினை வீசி அணிக்கு உதவினேன். பிட்ச்சை பார்ப்பதற்குவிட நன்றாக வேலை செய்தது என்றார்.

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறத... மேலும் பார்க்க

ஆர்சிபி பேட்டிங்: குஜராத் அணியில் ரபாடா விலகல்!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன. இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்... மேலும் பார்க்க

எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ... மேலும் பார்க்க

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க