செய்திகள் :

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

post image

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்து ச் செல்லப்பட்டன. பல மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால், மாநிலம் முழுவதும் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 578 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில பேரிட மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 279 நீர் வழிப் பாதைகள், 2263 மின்மாற்றிகள் ஆகியவை முடங்கியுள்ளன.

மேற்கத்திய இடையூறு எனப்படும் வெப்பமண்டல புயல் உருவானதால் இவ்வாறு காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிப். 25 அன்று தொடங்கிய மழையும் பனிப்பொழிவும் இன்னும் தொடர்கிறது என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

இது நாளை (மார்ச் 2) மீண்டும் தொடங்கும் என்றும், இதன் தாக்கம் அடுத்தடுத்த நாள்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குலு, மந்தி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

மார்ச் 5-க்குப் பின்னரே வானிலையில் மாற்றம் என்று ஆய்வு மையத்தினர் கூறினர்.

”அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வெப்ப மண்டல அலைகள் கிழக்கு திசையில் நகர்வதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் உள்பட தென்னிந்தியப் பகுதிகளில் கனமழை பெய்யும். 3-4 நாட்களில் புதிய மேற்கத்திய புயல் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும்” என இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சோமா சென் ரே தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் இருக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் வலியுறுத்தினார்.

சூட்கேஸில் காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

ஹரியாணாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது காங்கிரஸ் தொண்டர் என தெரிய வந்துள்ளது. ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில்... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க