செய்திகள் :

பாகிஸ்தான், ஈரானில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கன் அகதிகள்!

post image

பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 613 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் பிரதிநிதி அராபத் ஜமால், கடந்த 2024 ஆம் ஆண்டில் 21 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 முதல் 28 வரை ஈரான் 501 பேரை வெளியேற்றியதாகவும், பாகிஸ்தான் 112 பேரை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், ஈரானில் இருந்து கட்டாயமாக நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்துப் பேசிய ஜமால், "ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதிக்கு பங்களிக்கும் விதத்தில் சரியான முறையில் அவர்கள் நாடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் உடன்பட்டுள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிக்க | ஸெலென்ஸ்கியின் தோல்வி: டிரம்ப் சந்திப்பை விமர்சித்த ரஷியா!

நாடுகடத்தப்படும் மக்களை கண்ணியத்துடன் நடத்தவும், அவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். அவர்களை சரிவர நடத்தவில்லை என்றால் எல்லையின் இருபுறமும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் மோதலில் இருந்து தப்பி, பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சம் புகுந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் நெருக்கடி, உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் அகதிகள் திரும்புவது அவர்களின் நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்கும் என்று கூறப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸெலென்ஸ்கியின் தோல்வி: டிரம்ப் சந்திப்பை விமர்சித்த ரஷியா!

ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணம் முழுமையான அரசியல் தோல்வி என ரஷியா விமர்சித்துள்ளது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் க... மேலும் பார்க்க

போப் உடல்நிலையில் முன்னேற்றம்.. இன்று காலை காபி குடித்தார்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர் காபி குடித்து, ஓய்வெடுத்துள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்... மேலும் பார்க்க

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு காரசார வாக்குவாதத்தில் முடிந்தது.உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவர... மேலும் பார்க்க

மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுக... மேலும் பார்க்க

டிரம்ப் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிரடி முடிவு

அமெரிக்காவிலிருந்து நியூ ஸிலாந்துக்கு குடிபெயரப்போவதாகவும், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும், டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்து... மேலும் பார்க்க

'டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்... மேலும் பார்க்க