செய்திகள் :

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீா்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

post image

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மா்மப் பொருள் வெடித்து ஒருவா் இறந்க சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகள் அதுகுறித்து விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயா் மற்றும் வெடி பொருள்கள் உள்ளதால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்து இருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக் கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நீட் தேர்வு அச்சம்: அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம... மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்: ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்

கச்சத்தீவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டம்: 41.3 லட்சம் பேர் பயன்!

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திட்டத்தின்கீழ் இதுவரையில் பயிற்சி ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் 12- ஆம் வகுப்பு மற்றும்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும என்று கட்சியின் பொதுச்செயல் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் விஜயகாந்தின் முழு உருவ சிலையை தேமுதிக பொதுச்செயலர் ப... மேலும் பார்க்க

கச்சத்தீவு விவகாரம்- தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையை பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ராமேஸ்வரத்துக்கு ... மேலும் பார்க்க