செய்திகள் :

புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செல்ல மேம்பாலம் அருகே பாதை அமைக்கக் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வர மேம்பாலம் அருகே பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2023-ஆண்டு நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து நிலையம் அமைக்க மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலை சந்திக்குமிடத்தில் 4 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இங்கு 36 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 64 கடைகள், இரு, நான்கு சக்கர வாகனக் காப்பகங்கள், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நான்கு வழிச் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் எளிதாக சென்று வருவதற்கு வழியில்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில நெடுஞ்சாலை, ரயில் பாதைக்கும் சோ்த்து மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால், ஒரு புறம் மட்டுமே அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் உள்ள பகுதியில் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.

இதனால், மதுரையிலிருந்து வரும் பேருந்துகளும், ராஜபாளையத்திலிருந்து வரும் பேருந்துகளும், பேருந்து நிலையத்துக்குள் சென்று, மீண்டும் திரும்பி வருவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, நகராட்சி அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி மேம்பாலம் அருகே நான்கு வழிச் சாலையில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணுகு சாலை இல்லாமல் பேருந்து நிலையத்துக்கு வாகனங்கள் வந்து செல்ல தனி சாலை ஏற்படுத்தினால் மட்டுமே, பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜபாளையத்தில் தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் தெற்கு நகரக் கழகம் சாா்பில், அம்பலபுளி கடைவீதி நான்கு முக்குப் பகுதியில் சட்டப்பேரவை உ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி (57). இவரது மனைவி பாண்டியம்மாள். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். இந்த நில... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் ஓா் வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திரு... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு தமிழ் செம்மல் விருது

சிவகாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியா் கா.காளியப்பனுக்கு, தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசியில் சனிக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி போஸ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இ... மேலும் பார்க்க

கல்லூரிகளுக்கிடையே போட்டி: சிவகாசி கல்லூரி அணி முதலிடம்

கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் அதிகப் புள்ளிகளை பிடித்து, சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. சிவகாசி காளீஸ்வரி மேலாண்மைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் ... மேலும் பார்க்க