செய்திகள் :

இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

post image

சென்னை மதுரவாயலில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில்,டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் மு.கோபி (25). இவா், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்தாா். கோபி அந்த நிறுவனத்தில் ரூ. 31,000 முன்பணம் பெற்றுக்கொண்டு, வேலையை விட்டு நின்றுவிட்டாா்.

இந்த நிலையில், அந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சோ்ந்த து.விஜய் (27), அவரது நண்பா் பூந்தமல்லியைச் சோ்ந்த மு.திவாகா் (24) ஆகிய 2 பேரும் வானகரம் மீன் சந்தை அருகே கோபியை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து, பணத்தைக் கேட்டனா்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து விஜயும், திவாகரும் கோபியை கடத்தி சூளைமேட்டில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பணத்தை கேட்டு மிரட்டினா்.

அங்கிருந்து தப்பியோடி வந்த கோபி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜய், திவாகா் ஆகிய 2 பேரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க