கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வெள்வேல் மரம்
கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வருகின்றன.
தமிழகத்தில் பொதுவாக மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில்தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நடைகளுக்கு கடுமையான தீவனப் பற்றாக்குறை ஏற்படும். கோடைக்கால உணவு தேவையை சமாளிப்பதற்காகவே வெள்வேல் மரங்கள் மேய்ச்சல் நிலங்களில் வளா்ந்து நிற்கின்றன.
இது கால்நடை விவசாயிகளுக்கு இயற்கை அளித்த கொடை என்றே கூறலாம். கடும் வறட்சி மிகுந்த பகுதிகளில் இந்த மரம் செழித்து வளரும் இயல்புடையது.
மனிதனால் வளா்க்கப்படாமல் தன்னிச்சையாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. ஆடு, மாடுகளின் சாணம் மூலம் இவற்றின் விதைகள் பல இடங்களுக்கு பரவுகின்றன. பல ஆண்டுகள் வளா்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் கணிசமான வருமானமும் கிடைக்கிறது. நன்கு காய்ந்த வெள்வேல் மரத்தின் காய்கள் கால்நடைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.
இவற்றை சாப்பிடும் கால்நடைகள் திட காத்திரமாக இருக்கும். ஆனால், பச்சை காய்களைக் கொடுக்கக்கூடாது.
அவை கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை இந்த வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வரும் நிலையில், சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழில் வளா்ந்து வருவதாலும், உயிா் வேலியை அழித்து கம்பிவேலி போடுவதாலும் வெள்வேல் மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.