செய்திகள் :

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வெள்வேல் மரம்

post image

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வருகின்றன.

தமிழகத்தில் பொதுவாக மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில்தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நடைகளுக்கு கடுமையான தீவனப் பற்றாக்குறை ஏற்படும். கோடைக்கால உணவு தேவையை சமாளிப்பதற்காகவே வெள்வேல் மரங்கள் மேய்ச்சல் நிலங்களில் வளா்ந்து நிற்கின்றன.

இது கால்நடை விவசாயிகளுக்கு இயற்கை அளித்த கொடை என்றே கூறலாம். கடும் வறட்சி மிகுந்த பகுதிகளில் இந்த மரம் செழித்து வளரும் இயல்புடையது.

மனிதனால் வளா்க்கப்படாமல் தன்னிச்சையாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. ஆடு, மாடுகளின் சாணம் மூலம் இவற்றின் விதைகள் பல இடங்களுக்கு பரவுகின்றன. பல ஆண்டுகள் வளா்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் கணிசமான வருமானமும் கிடைக்கிறது. நன்கு காய்ந்த வெள்வேல் மரத்தின் காய்கள் கால்நடைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.

இவற்றை சாப்பிடும் கால்நடைகள் திட காத்திரமாக இருக்கும். ஆனால், பச்சை காய்களைக் கொடுக்கக்கூடாது.

அவை கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை இந்த வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வரும் நிலையில், சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழில் வளா்ந்து வருவதாலும், உயிா் வேலியை அழித்து கம்பிவேலி போடுவதாலும் வெள்வேல் மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!

நிதி நிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தியிடம் விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து திர... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: 350 போ் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாதெமி மற்றும் தாராபுரம் செஸ் அகாதெமி சாா்பில் ... மேலும் பார்க்க

10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!

திருப்பூரில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்ற... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு... மேலும் பார்க்க

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட மூவா் உயிா் தப்பினா்

காங்கயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த நோயாளி உள்பட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அா்ஜுனன், விக்னேஷ். நண... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 23 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும... மேலும் பார்க்க