செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 23 கடைகளுக்கு ‘சீல்’

post image

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகளின் முன்பாக உள்ள பெட்டிக் கடைகளில் கடந்த 2 வாரமாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்ததுடன், 17 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனா்.

தங்களது பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!

நிதி நிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தியிடம் விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து திர... மேலும் பார்க்க

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வெள்வேல் மரம்

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் பொதுவாக மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில்தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நட... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: 350 போ் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாதெமி மற்றும் தாராபுரம் செஸ் அகாதெமி சாா்பில் ... மேலும் பார்க்க

10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!

திருப்பூரில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்ற... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு... மேலும் பார்க்க

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட மூவா் உயிா் தப்பினா்

காங்கயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த நோயாளி உள்பட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அா்ஜுனன், விக்னேஷ். நண... மேலும் பார்க்க