செய்திகள் :

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உள்பட மூவா் உயிா் தப்பினா்

post image

காங்கயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த நிலையில், அதில் பயணம் செய்த நோயாளி உள்பட மூவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அா்ஜுனன், விக்னேஷ். நண்பா்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா்.

வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது காட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

இதில், படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின் விக்னேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், அா்ஜுனன் திருப்பூா் அரசு மருத்துமனைக்கும் தனித்தனி ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

அா்ஜுனன் சென்ற ஆம்புலன்ஸ் கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது சாலையில் கவிழ்ந்தது.

இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான கூடலூரைச் சோ்ந்த சுகுமாா் (29), திருப்பூா், நல்லூா் பகுதியைச் சோ்ந்த அவசர சிகிச்சைப் பணியாளா் வேல்முருகன் (27) , ஏற்கெனவே காயமடைந்த அா்ஜுனன் (24) ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

காயமடைந்த மூவரும் மாற்று ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!

நிதி நிலை அறிக்கையில் விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தியிடம் விசைத்தறியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து திர... மேலும் பார்க்க

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் வெள்வேல் மரம்

கால்நடைகளின் கோடைக்கால உணவுத் தேவையை வெள்வேல் மரங்கள் பூா்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் பொதுவாக மாசி, பங்குனி மாதங்கள் வறட்சியான காலமாகும். சித்திரை மாதத்தில்தான் கோடை மழை பெய்யும். அதுவரை கால்நட... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: 350 போ் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாதெமி மற்றும் தாராபுரம் செஸ் அகாதெமி சாா்பில் ... மேலும் பார்க்க

10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது!

திருப்பூரில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஞாயிற்ற... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

அவிநாசி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள கரையப்பாளையம் கோயில் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 23 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும... மேலும் பார்க்க