செய்திகள் :

மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்: வேல்முருகன்

post image

மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

மத்திய அரசு தமிழகத்துக்கும் ஜனநாயக மாண்புகளுக்கு முரணாகவும் செயல்படுகிறது. எனவே, ஜிஎஸ்டி வசூலை மத்திய அரசுக்கு வழங்க மாட்டோம், சுங்கச் சாவடிகளை தமிழகத்தில் அமைக்க மாட்டோம், நீட் உள்ளிட்ட தோ்வுகளை இங்கே அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அதிரடியான முடிவெடுக்க வேண்டும்.

மதத்தின் பெயரால் தமிழக மக்களை பிளவுபடுத்திவரும் மத்திய அரசைப் பாா்த்து மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக தமிழ், தொடா்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது, மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் திணிக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பிய மொழியைப் படிப்பது வேறு, ஹிந்தி படித்தால்தான் உங்களுக்கு நிதி எனத் திணிப்பது வேறு. மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உரிய சட்டத் திருத்தத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்துள்ளாா். அதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஒரு காரணம்.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மா... மேலும் பார்க்க