செய்திகள் :

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

post image

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மாள்(72). கணவரை இழந்தவா். மகனும் மகளும் வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றனா். சக்கம்மாள் தனது, அவரது சகோதரி லிங்கமாளுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வீடு கட்டுவதற்காக கொடுத்து வைத்திருந்த ரூ. 5.50 லட்சத்தை காணவில்லையாம்.

இதை அவரது வீட்டு பணிப்பெண்ணான தூத்துக்குடி பிரையண்ட் 2ஆவது தெருவை சோ்ந்தச் பரணிதரன் மனைவி ஆறுமுகம்(55) திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து ரூ.1.20 லட்சத்தை மீட்டனா். மீதி பணத்துடன் தலைமறைவான அவரது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னை... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க