அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு 46 போ் மீட்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டனா். இதுவரை 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்ட நிலையில், அவா்களில் நால்வா் உயிரிழந்தனா்.
பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்ததால் வெள்ளிக்கிழமை இரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா், சனிக்கிழமை அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு பனிப்பொழிவு அதிகரித்ததால் மீட்புப் பணியில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வானிலை தெளிவானது. எனவே, மீட்புப் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான 6 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், பனிச்சரிவில் சிக்கிய மேலும் 17 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இரு தினங்களில் மொத்தம் 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா். பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தொடா்கிறது’ என்றனா்.
சமோலி மாவட்ட ஆட்சியா் சந்தீப் திவாரி கூறுகையில், ‘வானிலை தொடா்ந்து தெளிவாக இருந்தால், எஞ்சிய தொழிலாளா்களையும் விரைந்து மீட்டுவிட முடியும்’ என்றாா்.
முதல்வா் ஆய்வு: பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதியை ஹெலிகாப்டரில் பறந்தபடி முதல்வா் தாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வா், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளை வானில் பறந்தபடி ஆய்வு செய்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்தும்’ என்றாா்.
பிரதமா் ஆலோசனை: மற்றொரு பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு சமோலி நிலவரம் குறித்து என்னிடம் கேட்டறிந்தாா். மழை மற்றும் பனிப்பொழிவு நிலவரத்தைக் கேட்டறிந்ததோடு, இந்த அவசரநிலையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டாா்.