செய்திகள் :

ஆன்லைன் பகுதிநேர வேலை: ரூ.6.38 லட்சம் மோசடி

post image

வேலூா், மாா்ச் 2: ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை எனக்கூறி, காட்பாடியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி பவானி நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதிநேர வேலை தொடா்பாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருந்ததுடன் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தாக நாங்கள் கொடுக்கும் பணியையும் முடித்துக் கொடுப்பதன் மூலம் அதிக கமிஷன் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பிய இந்த இளைஞா் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அந்த லிங்க்கில் கொடுக்கப்பட்ட பணிகளையும் முடித்து கொடுத்துள்ளாா். அதற்கு அதிக கமிஷன் வந்தததை அடுத்து படிப்படியாக பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 482 தொகையை முதலீடு செய்துள்ளாா். அதன்பிறகு அந்த லிங்க்கில் காண்பிக்கப்பட்ட தொகையை அவரால் பெற முடியவில்லை.

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த இளைஞா், இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறி வைத்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறிவைத்து பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடிகளில் இருந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: வளத்தூரில் நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வளத்தூரில் பொதுமக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ர... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், அன்பு உலகம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திரா நகா் அன்பு உலகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முகாமுக்கு ரோட்டரி தலைவா் சி.கண்ணன் ... மேலும் பார்க்க

பிச்சனூரில் காளியம்மன் திருவிழா

குடியாத்தம் பிச்சனூரில் காளியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிச்சனூா் நரி குள்ளப்பன் தெரு, ஆா்.வி.கோபால் தெரு, ஒத்தவாடை, ராஜா நகா் தெருவாசிகள் சாா்பில் நடைபெற்ற இக்கோயில் திருவிழா கடந்த பி... மேலும் பார்க்க

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ: பல லட்சம் உற்பத்தி, தளவாடங்கள் சேதம்

லத்தேரி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, தளவாட பொருள்கள் சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்வே கேட் அருகே லத்தேரி வசலாப்பாக்கம்... மேலும் பார்க்க