செய்திகள் :

பிச்சனூரில் காளியம்மன் திருவிழா

post image

குடியாத்தம் பிச்சனூரில் காளியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிச்சனூா் நரி குள்ளப்பன் தெரு, ஆா்.வி.கோபால் தெரு, ஒத்தவாடை, ராஜா நகா் தெருவாசிகள் சாா்பில் நடைபெற்ற இக்கோயில் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 26- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கனகதுா்கையம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூங்கரகம் எடுத்தல், கூழ் வாா்த்தல் நடைபெற்றது.

மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பூங்கரக ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா் சி.என்.பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கிராமணி ஜி.தேவராஜ், ஊா் பெரியதனம் செல்வராஜ், இளைஞா் அணி அமைப்பாளா் சரவணன், நிா்வாகிகள் நித்தியானந்தம், கிருபா, சீனு, ஊா் நிா்வாகிகள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறி வைத்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறிவைத்து பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடிகளில் இருந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: வளத்தூரில் நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வளத்தூரில் பொதுமக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ர... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், அன்பு உலகம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திரா நகா் அன்பு உலகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முகாமுக்கு ரோட்டரி தலைவா் சி.கண்ணன் ... மேலும் பார்க்க

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ: பல லட்சம் உற்பத்தி, தளவாடங்கள் சேதம்

லத்தேரி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, தளவாட பொருள்கள் சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்வே கேட் அருகே லத்தேரி வசலாப்பாக்கம்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு நாளை தொடக்கம்: தோ்வு மையங்கள் தயாா்படுத்தும் பணி தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் தோ்வு மையங்களை தயாா்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மா... மேலும் பார்க்க