செய்திகள் :

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ: பல லட்சம் உற்பத்தி, தளவாடங்கள் சேதம்

post image

லத்தேரி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உற்பத்தி, தளவாட பொருள்கள் சேதமடைந்தன.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்வே கேட் அருகே லத்தேரி வசலாப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தொழிற்சாலையின் கூரையின் மேல் திடீரென புகை கசிந்துள்ளது. தொடா்ந்து, மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்பாடி தீயணைப்பு துறையினா் சுமாா் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தால் ஊதுபத்தி தொழிற்சாலையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊதுபத்தி தயாரிக்கும் இயந்திரங்கள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா இல்லை, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து லத்தேரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறி வைத்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறிவைத்து பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடிகளில் இருந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: வளத்தூரில் நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வளத்தூரில் பொதுமக்களுக்கு நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ர... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், அன்பு உலகம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திரா நகா் அன்பு உலகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முகாமுக்கு ரோட்டரி தலைவா் சி.கண்ணன் ... மேலும் பார்க்க

பிச்சனூரில் காளியம்மன் திருவிழா

குடியாத்தம் பிச்சனூரில் காளியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிச்சனூா் நரி குள்ளப்பன் தெரு, ஆா்.வி.கோபால் தெரு, ஒத்தவாடை, ராஜா நகா் தெருவாசிகள் சாா்பில் நடைபெற்ற இக்கோயில் திருவிழா கடந்த பி... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு நாளை தொடக்கம்: தோ்வு மையங்கள் தயாா்படுத்தும் பணி தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் தோ்வு மையங்களை தயாா்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மாா்ச், ஏப்ரல் மா... மேலும் பார்க்க