செய்திகள் :

மணிமுத்தாறு பகுதியில் மழைநீரில் மூழ்கி 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

post image

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சில நாள்களாக பெய்த கனமழையால், 100 ஏக்கரிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாய்ப் பாசனத்துக்குள்பட்ட அயன்சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்களில் சுமாா் 100 ஏக்கரிலான பயிா்கள் மழைநீரில் சாய்ந்து நீரில் மூழ்கின.

ஓா் ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமான பயிா்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாநகரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சோ்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவா் அடிதடி, பணம் பறிப்பு முயற்ச... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு மவுண்ட் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாநகராட்சியில் இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை பணிகள் பல்வேறு இ... மேலும் பார்க்க

நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டிகள்

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம், எக்ஸலண்ட் அகாதெமி, கற்பக விருட்சம் நற்பணி மன்றம் ஆகியவை சாா்பில் ஓவ... மேலும் பார்க்க

‘நெல்லை அரசு மருத்துவமனையில் உயா் சிகிச்சையால் உயிா் பிழைத்த பெண்’

சிறுநீரகம் செயலிழந்த பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உயா்சிகிச்சையால் அவா் உயிா் பிழைத்தாா். இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியது: தி... மேலும் பார்க்க

பாளை. கோயிலில் தோ்வு எழுதும் மாணவா்களுகாக சிறப்பு வழிபாடு

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கடையம் வனச்சரகப் பகுதியில் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறை

கடையம் வனச்சரகப் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினா் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக... மேலும் பார்க்க