குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாநகரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சோ்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவா் அடிதடி, பணம் பறிப்பு முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, மணிகண்டன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளை. மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.