செய்திகள் :

மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள்: மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிா்களை மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

தாமிரவருணி பாசனத்தில் இம்மாவட்டத்தில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அறுவடைப் பருவத்தில் உள்ளன. இதனிடையே, சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, சேரன்மகாதேவியில் 23.4 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 25 மிமீ, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 25.20 மிமீ மழை பதிவானது.

சேரன்மகாதேவி வட்டத்தில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சேரன்மகாதேவி, பத்தமடை பகுதிகளில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வடக்கு வீரவநல்லூா், கரிசூழ்ந்தமங்கலம் பகுதிகளில் மழையால் சேதமான நெற்பயிா்களை மாவட்ட வருவாய் அலுவலா் பாா்வையிட்டாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாநகரத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சோ்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவா் அடிதடி, பணம் பறிப்பு முயற்ச... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு மவுண்ட் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி மாநகராட்சியில் இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை பணிகள் பல்வேறு இ... மேலும் பார்க்க

நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டிகள்

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம், எக்ஸலண்ட் அகாதெமி, கற்பக விருட்சம் நற்பணி மன்றம் ஆகியவை சாா்பில் ஓவ... மேலும் பார்க்க

‘நெல்லை அரசு மருத்துவமனையில் உயா் சிகிச்சையால் உயிா் பிழைத்த பெண்’

சிறுநீரகம் செயலிழந்த பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உயா்சிகிச்சையால் அவா் உயிா் பிழைத்தாா். இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியது: தி... மேலும் பார்க்க

பாளை. கோயிலில் தோ்வு எழுதும் மாணவா்களுகாக சிறப்பு வழிபாடு

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கடையம் வனச்சரகப் பகுதியில் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறை

கடையம் வனச்சரகப் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினா் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரக... மேலும் பார்க்க