செய்திகள் :

திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், ஆலத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் (36). இவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது பெண்ணும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனராம்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் குமரவேல் பலமுறை தனிமையில் இருந்தாராம்.

இதனால், கா்ப்பமடைந்த அந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவா் வற்புறுத்தி வந்த நிலையில், குமரவேல் அதற்கு மறுப்பு தெரிவித்தாராம்.

மேலும், அந்த பெண்ணுக்கு குமரவேல் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் குமரவேலை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குமரவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.இளவரசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிம... மேலும் பார்க்க