செய்திகள் :

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை 8 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது. சித்திபேட்டையில் உள்ள நாராயண்ராவ்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 245.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்டியன்னாரம் பகுதியில் 128 மிமீ, முஷீராபாத் பகுதியில் 114.5 மிமீ மழையும் பெய்துள்ளது.

தெலங்கானாவில் இந்த கனமழையால் அங்குள்ள சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியும் போக்குவரத்து காவல்துறையினரும் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் அதிமுகள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பர்சிகுட்டாவில் வடிகால் சுவர் இடிந்து விழுந்ததில், 2 குழந்தைகளுக்குத் தந்தையான சன்னி என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல நம்பள்ளி பகுதியில் அர்ஜுன்(26), ராமா(28) ஆகிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்குள்ள பல கடைகளில் வெள்ளம் புகுந்து பொருள்கள் சேதமாகியுள்ளன. மிகவும் மோசமான வடிகால் அமைப்பு முறையே இவ்வளவு பாதிப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக தெலங்கானாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Hyderabad roads turn into rivers, traffic crawls amid heavy rain; 3 missing

இதையும் படிக்க | வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. 'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் ... மேலும் பார்க்க

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி க... மேலும் பார்க்க

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சி... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை வானிலை ஆய்வு மையத்தின்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: சில விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொட... மேலும் பார்க்க