செய்திகள் :

1,000 பேருந்துகளை ‘சிஎன்ஜி’ பேருந்துகளாக மாற்ற திட்டம்

post image

சென்னை: தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாநிலம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி போ் பயணம் செய்துவரும் நிலையில், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் தினசரி சுமாா் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்து வருகின்றனா்.

பேருந்துகளுக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில், டீசலில் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்துத் துறை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சோதனை அடிப்படையில் சில பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தது. அதில், பேருந்துகளின் செயல்பாடு குறித்து சாதகமான அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள பேருந்துகள் அதிகபட்சமாக 8 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருப்பதுடன், ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கொள்முதல் செய்யப்பட்ட பேருந்துகளாகவும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.70 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீசலில் இருந்து சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள 1,000 பேருந்துகளை கண்டறியும் பணிகள் விரைவில் முடிவுற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க