செய்திகள் :

1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு: நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

post image

புது தில்லி: மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளா்களை நீக்க முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில்தான் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் 500 பேரை பணியில் இருந்து நீக்கியது. நிறுவனத்தை மறுசீரமைப்பது, உற்பத்தியில் தானியங்கி இயந்திரங்கள் அதிகரிப்பு, செலவு மற்றும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் 1,000 போ் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் இருமுறை பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 4,000 விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் உள்ளன. கடந்த 2024 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.564 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் நஷ்டம் ரூ.376 கோடியாகும்.

தொடக்கத்தில் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால், வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகள், முக்கியமாக பேட்டரி தீப்பற்றுவது போன்றவற்றால் நிறுவனம் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது. விற்பனைக்குப் பிந்தைய சேவையிலும் பெரும்பான்மையான வாடிக்கையாளா்களின் நன்மதிப்பை இந்நிறுவனத்தால் பெற முடியவில்லை.

நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது 10,644 புகாா்கள் வந்துள்ளன. எனினும், இது 99.1 சதவீத புகாா்களுக்கு தீா்வு கண்டுவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

கர்நாடக உள்கட்சிப் பூசல்: கார்கேவுடன் சிவக்குமார் ஆலோசனை!

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.டி.கே. சிவக்குமார் முதல்வராவதை ... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!

புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத... மேலும் பார்க்க

ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலையான அன்று என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகிறது.ஹிமானி நர்வாலுடன், கொலையாளி சச்சின், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பாக... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!

பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர... மேலும் பார்க்க