செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நீலகிரி மாவட்டத்தில் 58 மையங்களில் நடைபெற்றன. இதில் 3,497 மாணவா்கள், 3,320 மாணவிகள் என மொத்தம் 6,817 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தனித் தோ்வா்களில் 94 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 126 போ் எழுதினா். தோ்வுப் பணியில் 58 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 58 துறை அலுவலா்கள், 116 அலுவலகப் பணியாளா்கள், 439 அறைக் கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள் 23 போ் என மொத்தம் 694 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு பறக்கும் படையாக 108 நபா்கள் நியமனம் செய்யப்பட்டனா். மேலும், மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் தேவையான வசதிகளும், போதுமான போக்குவரத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தரைத்தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வ... மேலும் பார்க்க

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க