10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.18 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், பரமத்திவேலூா் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பரமத்திவேலூா் - 103.1, ஈரோடு - 102.92, திருச்சி - 102.74, தஞ்சாவூா் - 102.2, சேலம் - 101.66, திருச்சி - 101.3, மதுரை விமான நிலையம் - 101.12, திருத்தணி - 100.74, தருமபுரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என 10 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.24) முதல் ஏப்.26-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.24) திகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
கீழடுக்கு சுழற்சி: தென்தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக வியாழக்கிழமை (ஏப்.24) முதல் ஏப்.29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு, ஆனைகெடங்கு பகுதிகளில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. அடையாமடை (கன்னியாகுமரி) - 60 மி.மீ., குளச்சல் (கன்னியாகுமரி), கமுதி (ராமநாதபுரம்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.