செய்திகள் :

100 பயனாளிகளுக்கு 50% மானியத்துடன் நாட்டினக் கோழிக்குஞ்சுகள் அளிப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், 2024 - 25ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் சங்கராபுரம் ஒன்றியத்தில் கால்நடை மருந்தகங்களின் கீழ் உள்ள கிராமங்களில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை ஆட்சியா் வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா், கல்வராயன்மலை, சின்னசேலம், திருநாவலூா், தியாகதுருகம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 900 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 40 நாட்டினக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை பயனாளிகள் உரிய முறையில் பராமரித்து வளா்த்து விற்பனை செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மு.கந்தசாமி, கால்நடை மருத்துவா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலம், பாரமா் வட்டம் இந்திரானா பகுதியைச் சோ்ந்த மால்சிங் மகன் சந்தன் சிங் (18). இவா் கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவிக்கு காதொலிக் கருவி கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கள ஆய்வின்போது காதொலிக் கருவி வேண்டி 10-ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை மனு அளித்த... மேலும் பார்க்க

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க