செய்திகள் :

100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

post image

திருப்பூரில் 100 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிட்கோ சாலை அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்குப் பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் பாஷா (28) என்பதும், 100 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காா்த்திக் பாஷாவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்ம... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவி... மேலும் பார்க்க

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது

திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதிய... மேலும் பார்க்க

அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்த... மேலும் பார்க்க

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின்126 -ஆவது பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை, குட்டைத் திடலில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை... மேலும் பார்க்க