செய்திகள் :

108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையுள்ள பகுதிகளில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அறந்தாங்கியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் (சிஓஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் வீரமுத்து தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் இரா. ராஜேந்திரன், மண்டலச் செயலா் கே.எஸ். நாகலட்சுமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை கருவப்பில்லான்கேட், அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் சாலை விபத்துகள் அடிக்கடி நடப்பதால், ஆம்புலன்ஸ் தேவை அதிகமாக இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நோயாளா்களை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ் சேவை அதிகம் தேவை இருக்கிறது. எனவே, இந்தப் பகுதிகளில் கூடுதலாக ஆம்புலன்ஸ் வசதியை செய்துத் தர வேண்டும்.

பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பழுதுநீக்கி அவசரத் தேவைக்கான தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க