செய்திகள் :

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

post image

பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுடன் வாஹா படத்திலும் நடித்துள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ரன்யா ராவ் உரிய ஆவணங்கள் இல்லாத 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவரைக் கைது செய்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 15 நாள்களில் ரன்யா ராவ் நான்கு முறை துபைக்குப் பயணம் செய்துள்ளார். இதனால், அவர் தனியாக தங்கம் கடத்தினாரா? அல்லது அவருக்குப் பின்னால் யாரும் உள்ளனரவா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க

உ.பி.யில் கட்டப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும்

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தா... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை வெற்றிகரமாக பரிசோதனை

‘தேஜஸ்’ இலகு ரக போா் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. போா் விமானங்களில் ப... மேலும் பார்க்க