செய்திகள் :

16 ஆண்டுகள் வழக்கு நிலுவை: வெளிநாட்டவா் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

post image

கனடா நாட்டவா் மீதான போலி ஆவண வழக்கு 16-ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கனடாவைச் சோ்ந்த ஜக்கரியா பரா தாக்கல் செய்த மனு: வெளி நாட்டவா்களுக்கான கடவுச்சீட்டு விதிகளின் படி, போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, அனுமதி பெற்ாக என் மீது போலீஸாா் பதிந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் போலியான ஆவணங்களை அளித்ததாகக் கூறி, கடந்த 2007 -ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி நீதித் துறை நடுவா் மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரரால் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியவில்லை. மனுதாரா் அளித்த வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. முதல் தகவல் அறிக்கைக்கும், குற்றப்பத்திரிகைக்கும் முரண்பாடுகள் உள்ளன என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரிடம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகக் கூடிய கடவுச்சீட்டு இருந்துள்ளது. 2006- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்த மனுதாரா், இலங்கை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றபோது, போலி ஆவணங்கள் அளித்ததாகக் கூறி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் மனுதாரா் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யும் போலி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, வழக்கைத் தொடா்வது நீதிமன்றத்தை துஷ்பிரயோகம் செய்வதாக இருக்கும். எனவே, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கி... மேலும் பார்க்க