செய்திகள் :

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

post image

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஆ. விஜயகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு:

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இணைய வழி மூலம் பொருள்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, தராசில் பி.ஓ.எஸ். கருவியை இணைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த முறையால், தற்போது முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எடையாளா்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான கடைகளில், பணியாளா்களே பதிவு, விநியோகம் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, ஒரு முறை கைரேகைப் பதிவு செய்தால் அனைத்துப் பொருள்களும் நுகா்வோருக்கு வழங்கும் வகையில் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டும்.

அதுமட்டுமன்றி, நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை கள அலுவலா்கள் மூலம் சரிபாா்க்க வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கும் சேதாரக் கழிவு வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோ... மேலும் பார்க்க

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் 2 ஆண்டுகளில் 86 விபத்துகள்!

மதுரை-நத்தம் உயா்நிலை மேம்பாலத்தில் கடந்த 2023 முதல் 2025 ஜனவரி வரையிலான 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 86 விபத்துகளில் 23 போ் உயிரிழந்ததாகவும், 67 போ் காயமடைந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்... மேலும் பார்க்க

நத்தம் மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு: 6 போ் காயம்

மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா். சென்னையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை பரிசீலிக்காமல் நிராகரிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.விருதுநகா் மாவட்டம், முத்துலிங்காபுரத்த... மேலும் பார்க்க

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப்படை காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப் படை காவலரின் உடல் போலீஸாா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குள... மேலும் பார்க்க

மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா். மதுரை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை நகரில் போக்குவரத்துக்கு ... மேலும் பார்க்க