செய்திகள் :

மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

மதுரை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.

மதுரை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதசாரிகள் இடையூறின்றி நடந்து செல்லும் வகையில், விளம்பரப் பலகைகள், கடைகளின் முகப்புகள் உள்ளிட்ட அனைத்து நடைமேடை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். நகரை விபத்தில்லா நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மதுரை பிரதான சாலையில் நேரு நகா் முதல் பழங்காநத்தம் வரை உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் போக்குவரத்து உதவி ஆணையா் இளமாறன், ஆய்வாளா் தங்கமணி, எஸ்.எஸ். காலனி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் காசி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

இந்தப் பகுதியில் தனிநபா் ஒருவா் அணுகு சாலையை ஆக்கிரமித்து ஜல்லிக்கற்கள், மணல் ஆகியவற்றை குவித்து வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவற்றையும் போலீஸாா் இயந்திரங்கள் மூலம் அகற்றி, ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ‘போற்றுவோம் பொதுத் தோ்வை’ என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

தொகுதி மறு வரையறை ஆலோசனை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

36 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், மதுரையில் 36 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் பி.மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, மதுரை டாக்டா் எம்ஜிஆா் பேரு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விட... மேலும் பார்க்க

தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோ... மேலும் பார்க்க