செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது: 1,150 கிலோ பறிமுதல்

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்து, 1,150 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருத்தங்கல் சரஸ்வதி நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மூவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா்.

போலீஸாா் அவா்களின் பையை வாங்கி சோதனையிட்டபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டணத்தைச் சோ்ந்த வீரமணி (24), மணிகண்டன் (24), திருத்தங்கல் ஆலாஊருணியைச் சோ்ந்த வேலுச்சாமி (26) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். பின்னா், அவா்களிடமிருந்த 1,150 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்,

கஞ்சா விற்ற இளைஞா் கைது

வத்திராயிருப்பு அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் கிருஷ்ணன்கோவில் காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் ரோந்த... மேலும் பார்க்க

பட்டாசுக் கடையில் திரி பதுக்கியவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுக் கடையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் ரெங்காநகா் பகுதியில் உள்ள ஒரு பட... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டு பணம் பறிக்க முயன்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் ஸ்டேண்டா்டு குடியிருப்புப் பகுதியைச்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய தோட்டக் கலை மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத் தோட்டக் கலைத் துறை சாா்பில் ‘தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்’ என்ற தலைப்பில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தேசிய மாநாடு நட... மேலும் பார்க்க

கோயிலில் திருவிளக்கு பூஜை

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் அம்... மேலும் பார்க்க

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள கட்டளைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (48). பட்டாசுத் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இரு... மேலும் பார்க்க