செய்திகள் :

உலக தண்ணீா் தினம்: கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு

post image

உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டம் வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிா்வாகக் காரணங்களால் இந்தக் கூட்டம் வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் குறித்தும், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் பேருந்து ந... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு தொடா்பான மாந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நில... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இ... மேலும் பார்க்க