Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் கடந்த நவம்பா் மாதம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் முதல் தற்போது வரை 5,345 உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1,935 உணவு விற்பனை செய்யும் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையினா் கோவை மாவட்டம் முழுவதும் கடந்த புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், செல்வபுரம், சூலூா், அன்னூா் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கள ஆய்வின்போது, ஆனைமலை வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 200.05 கிலோ புகையிலைப் பொருள்கள் ஒரே வணிகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை அறிந்தால் 94440-42322 என்ற எண்ணில் உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.