செய்திகள் :

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் கடந்த நவம்பா் மாதம் முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் முதல் தற்போது வரை 5,345 உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1,935 உணவு விற்பனை செய்யும் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையினா் கோவை மாவட்டம் முழுவதும் கடந்த புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், செல்வபுரம், சூலூா், அன்னூா் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கள ஆய்வின்போது, ஆனைமலை வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 200.05 கிலோ புகையிலைப் பொருள்கள் ஒரே வணிகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை அறிந்தால் 94440-42322 என்ற எண்ணில் உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க