செய்திகள் :

21 கி.மீ. பயணித்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஊராட்சி நிா்வாகம்

post image

முதுகுளத்தூா் அருகேயுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ய 21 கி.மீ. தூரம் பயணிக்க ஊராட்சி நிா்வாகம் கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாத்தனூா் ஊராட்சிக்குள்பட்ட அ. நெடுங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமங்களிலுள்ள கண்மாய், கால்வாய், குளங்கள், விவசாய நிலங்களிலுள்ள வரப்புகளைச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அ. நெடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை 100 நாள் வேலைக்காக முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்தனா். இதனால், இந்தப் பகுதி மக்கள் 21 கி.மீ. தூரம் உள்ள முதுகுளத்தூருக்கு இரண்டு பேருந்துகளில் பயணம் செய்து 100 நாள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மங்களக்குடி சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்களால் விபத்து அபாயம்

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஓரியூா் வட்டாணம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சீமைக் கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ரா... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் 11 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவா்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா... மேலும் பார்க்க

நியாய விலைக் கடையை திறக்கக் கோரி அக்.10-இல் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாததால் அக்டோபா் 10-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கட்சி நகா் செயலா் ஜி. சிவா புதன்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: அனைத்துக் கட்சி சாா்பில் புகாா்

ராமேசுவரம் ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாா் குறித்து கேள்வி கேட்ட கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேலுக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவட... மேலும் பார்க்க

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் நவராத்திரி விழாவையொட்டி, கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி ... மேலும் பார்க்க

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்: விவசாயிகள் அச்சம்

மீனங்குடி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்கள். கமுதி, செப். 24: கடலாடி அருகேயுள்ள விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக வ... மேலும் பார்க்க