செய்திகள் :

25 வயதில் ரச்சின் ரவீந்திரா இத்தனை சாதனைகளா?

post image

ஐசிசி தொடர்களின் அறிமுகப் போட்டிகளிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நேற்றையப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 112 ரன்கள் (12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தார்.

இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்‌ஷர் படேல்!

நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரச்சின் ரவீந்திரா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். ஐசிசி தொடர்களின் அறிமுகப் போட்டிகளிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய அவர், நேற்று சாம்பியன்ஸ் டிராபி அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார்.

நியூசிலாந்து அணிக்காக ஐசிசியின் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் இதுவரை ஐசிசி நடத்தும் ஒருநாள் வடிவிலான போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். இதற்கு முன், 3 சதங்களுடன் இந்த சாதனையை கேன் வில்லியம்சன் தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “கோஹினூர் வைரம்...” விராட் கோலியை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் குவித்த 5-வது வீரர் என்ற சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். அவர் 26 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் டெவான் கான்வே (22 இன்னிங்ஸ்கள்), கிளன் டெர்னர் (24 இன்னிங்ஸ்கள்), டேரில் மிட்செல் (24 இன்னிங்ஸ்கள்) மற்றும் ஆண்ட்ரூ ஜோன்ஸ் (25 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் உள்ளனர்.

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க