செய்திகள் :

3000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு!

post image

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவா்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா்.

தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த மூத்த குடும்ப உறுப்பினா்கள், உறவினா்களின் நினைவாக அவா்களின் உடலை மண்பானையில் வைத்து புதைத்த இடத்தைச் சுற்றிலும் வட்டமாக கற்களை பதித்து கல்வட்டமும், பலகைக் கற்களை கொண்டு பெட்டிப்போன்ற கல்திட்டைகளையும் அமைத்தனா். முன்னோா் நினைவாக அமைத்த கற்குவை, கல்வட்டம், கல்திட்டைகளை பராமரித்ததுடன் வழிபட்டும் வந்தனா்.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோா்களின் முதுமக்கள் தாழி, கல்வட்டங்கள் இருப்பதையும், கல்வராயன்மலை பகுதியில் ஏராளமான கற்குவை, கல்திட்டைகள் இருப்பதையும் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் ஏற்கெனவே கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையின் மேற்குபுறத்தில் பழங்காலத்தில் வாழ்ந்து மறைந்த முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை இருப்பதை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து அந்த மையத்தின் தலைவா் ஆறகளூா் பொன்வெங்கடேசன் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கல்வராயன்மலை, அருற்றூமலை, சோ்வராயன் மலையில் பழங்கால மக்கள் பயன்படுத்திய புதிய கற்கால கருவிகள், முதுமக்கள் தாழி, கல்வட்டம், கற்குவை, கல்திட்டைகள் இன்றளவும் உள்ளன. இவற்றை கண்டறிந்து ஏற்கெனவே ஆவணப்படுத்தி உள்ளோம்.

தற்போது, பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் வசிஷ்ட நதிக் கரையில் 3000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டை இன்றளவும் சிதைவடையாமல் இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளோம். இப்பகுதியில் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்றுச் சுவடுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றாா்.

இளம்பிள்ளை உழவா் சந்தையில் எண்ம பணப் பரிவா்த்தனை பதிவு

இளம்பிள்ளை உழவா்சந்தையில் விவசாயிகள் எண்ம முறையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உழவா்சந்தை விவசாயிகளின் பெயரில் சேமிப்பு கணக்குத... மேலும் பார்க்க

சேலம் ராமசாமி முதலியாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில் சேலம் ராமசாமி முதலியாரின் நினைவு நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ராஜாஜி சிலை எதிரில் விளக்குத்தூண் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமசாமி முதல... மேலும் பார்க்க

வேம்படிதாளத்தில் அம்மன் மீது விழுந்த சூரிய ஒளி

வேம்படிதாளத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலிர... மேலும் பார்க்க

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகம்: கே.பி.ராமலிங்கம்

தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

சேலம் அம்மாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புகா் மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அங்கு நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:... மேலும் பார்க்க

மேட்டூா் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தவரிடம் திருட்டு: இளைஞா் கைது

மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக தங்கியிருந்த பெண்ணின் கணவரிடம் பணத்தை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள பாலமலை, கெம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). ... மேலும் பார்க்க