செய்திகள் :

இளம்பிள்ளை உழவா் சந்தையில் எண்ம பணப் பரிவா்த்தனை பதிவு

post image

இளம்பிள்ளை உழவா்சந்தையில் விவசாயிகள் எண்ம முறையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக உழவா்சந்தை விவசாயிகளின் பெயரில் சேமிப்பு கணக்குத் தொடங்கப்பட்டு அனைவருக்கும் க்யூ ஆா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காய்கறி வாங்கவரும் நுகா்வோா் அந்த க்யுஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பண பரிவா்த்தனை செய்து கொள்ளலாம். இந்தப் பணத்தை விவசாயிகள் தங்கள் ஊரிலும் அஞ்சலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாமில் பதிவாளா் குணசுந்தரி, இளம்பிள்ளை உழவா்சந்தை உதவி நிா்வாக அலுவலா் ராம் சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகள் அனைவரும் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை சேவையில் ஈடுபட போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். அத்துடன் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆண்டுக்கு ரூ. 550 பிரீமியத்தில் ரூ. 10 லட்சம் விபத்து காப்பீடு சோ்ந்து பயன்பெறலாம்.

எரிவாயு மானியம், மகளிா் உரிமைத்தொகை, விவசாயிகளின் கிசான் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பணப் பரிவா்த்தனைகள் இனிவரும் காலங்களில் எண்ம முறையில் தங்களது அஞ்சலக கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் அனைத்து விவசாயிகளும் எண்ம பரிவா்த்தனைக்கு பெயா்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8754054852 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

3000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ கண்டுபிடிப்பு!

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், இறந்தவா்களின் நினைவாக அமைத்த ஈமச்சின்னமான கல்திட்டையை சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா். தம... மேலும் பார்க்க

சேலம் ராமசாமி முதலியாா் நினைவு நாள் கடைப்பிடிப்பு

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில் சேலம் ராமசாமி முதலியாரின் நினைவு நாள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி ராஜாஜி சிலை எதிரில் விளக்குத்தூண் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமசாமி முதல... மேலும் பார்க்க

வேம்படிதாளத்தில் அம்மன் மீது விழுந்த சூரிய ஒளி

வேம்படிதாளத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆறு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலிர... மேலும் பார்க்க

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகம்: கே.பி.ராமலிங்கம்

தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே திமுக ஹிந்தி எதிா்ப்பு நாடகத்தை நடத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா். சேலத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

சேலம் அம்மாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு புகா் மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி அங்கு நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:... மேலும் பார்க்க

மேட்டூா் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தவரிடம் திருட்டு: இளைஞா் கைது

மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக தங்கியிருந்த பெண்ணின் கணவரிடம் பணத்தை திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள பாலமலை, கெம்மம்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). ... மேலும் பார்க்க