செய்திகள் :

5-ம் நாளாக சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!

post image

தொடர்ந்து 5-வது நாளாக பங்குச் சந்தை வர்த்தகம் இன்றும்(வியாழக்கிழமை) சரிவுடன் நிறைவு பெற்றுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,574.31 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது.

காலையில் வர்த்தகம் பெரிய மாற்றமில்லாத நிலையில் பிற்பகலில் கடும் சரிவைச் சந்தித்தது.

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 555.95 புள்ளிகள் குறைந்து 81,159.68 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த 5 நாள்களில் சென்செக்ஸ் 1,854 புள்ளிகள் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166.05 புள்ளிகள் குறைந்து 24,890.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டண உயர்வால் இன்றும் ஐடி பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

நிஃப்டி மெட்டல் (0.22%) உயர்ந்தது. அதைத் தவிர மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன,

அதிகபட்சமாக நிஃப்டி ரியாலிட்டி (1.65%) சரிந்தது. நிஃப்டி ஐடி (1.27%), ஆட்டோ (0.92%), பார்மா (0.92%),, எஃப்எம்சிஜி (0.50%) இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி வங்கி 0.26 சதவீதம் சரிந்த அதே நேரத்தில் நிதி சேவைகள் 0.53% சரிந்தது.

சென்செக்ஸில் டிரென்ட் 3.58% சரிந்தது. பவர் கிரிட் 3.05%, டாடா மோட்டார்ஸ் 2.73%, டிசிஎஸ் 2.53%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.15%, என்டிபிசி 2.07% சரிந்தன.

அதேநேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தகத்தில் 1,478 பங்குகள் லாபமடைந்தும் 2,700 பங்குகள் சரிந்தும் 141 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

Stock Market: Sensex extends slide to 5th day, ends 556 pts lower; Nifty below 24,900

அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு

அமராவதி: நாட்​டிலேயே அறுவை சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் ஆந்​திரம் முதலிடம் வகிப்பதற்கு "பேராசை பிடித்த மருத்துவர்களே" காரணம் என குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அறுவை ... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்... மேலும் பார்க்க

தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

கோவை : கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை கெடூரமாக தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 5-ல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் 5 ஆம் தேதி தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்க‌ளிலும், அந்த‌ந்த‌ மாவ‌ட்ட‌ ஆட்சியர் அலுவலகங்களின்... மேலும் பார்க்க

எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!

பிரபல எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா உடல் நலக்குறைவால் காலமானார். கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளரான எஸ். எல். பைரப்பா இந்தியளவில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பருவம், ஒரு குடும்பம் சிதைகிற... மேலும் பார்க்க

உலகை நானே காப்பாற்றனுமா... டிரம்ப்பின் அடுத்த புலம்பல்!

நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்த... மேலும் பார்க்க