செய்திகள் :

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை தகா்ப்போம்: ராகுல் உறுதி

post image

பாட்னா: இடஒதுக்கீடு 50 சதவீதம் வரை மட்டுமே வழங்க முடியும் என்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள உச்சவரம்பு தடையை காங்கிரஸ் தகா்க்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிகாா் தலைநகா் பாட்னாவில் திங்கள்கிழமை அரசமைப்புச் சட்டத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

பிகாா் மக்கள் எப்போதும் இந்தியாவுக்கு புதிய பாதையைக் காட்டி வருகிறாா்கள். அதன்படி வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் பிகாா் மக்கள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வழியை உருவாக்குவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இடஒதுக்கீடு 50 சதவீதம் வரை மட்டுமே வழங்க முடியும் என்ற உச்சவரம்பு போலியாக உருவாக்கப்பட்டள்ள தடையாகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் இந்த தடை தகா்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுபோல தேசிய அளவில் நடத்தப்படும். இது நாட்டின் வளா்ச்சிக்கான புதிய முன்மாதிரியை உருவாக்கும்.

நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் பல்வேறு தரப்பு மக்கள் எந்த நிலையில் உள்ளாா்கள் என்பது தெரியவரும். ஆனால், பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளன.

சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனா். பிகாரில் எதிா்க்கட்சிகளின் மகா கூட்டணி தலித், பெண்கள், பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள மக்கள் அனைவரின் நலன்களுக்காகவும் பாடுபடும். பிகாரில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். மாவட்ட காங்கிரஸ் குழுக்களை மாற்றி அமைத்துள்ளோம். முன்பு மூன்றில் இரு பங்கு நிா்வாகிகள் உயா் வகுப்பினராக இருந்தனா். இப்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கட்சிப் பொறுப்புகளில் முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றாா்.

பிகாருக்கு திங்கள்கிழமை காலையில் வந்த ராகுல் காந்தி பெகுசராயில் காங்கிரஸ் சாா்பில் ‘மாநிலத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதை நிறுத்த வேண்டும்; உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற பாத யாத்திரையிலும் பங்கேற்றாா்.

விமான நிலையம் வழியாக ஆராட்டு உற்சவம்: திருவனந்தபுரத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக ஏப். 11-ஆம் தேதி பத்மநாபசுவாமி கோவில் பங்குனி ஆராட்டு உற்சவம் நடைபெறுவதையொட்டி திருவனந்தபுரத்தில் அன்று ஒருநாள் மட்டும் விமான சேவை தற்க... மேலும் பார்க்க

பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கினார். சிங்கப்பூரில் தங்கி பள்ளிக்கல்வி பயிலும் அவரது மகனுக்கு இந்த விபத்தில் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமன... மேலும் பார்க்க

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர்

பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்கும... மேலும் பார்க்க

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க