செய்திகள் :

6 சதங்கள் அடித்தும் தோல்வியில் முடிந்த ரிஷப்பின் சோக வரலாறு!

post image

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்தியாவுக்கு வெளியே 6 சதங்கள் விளாசியிருந்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு முன்னாள் ஜாம்பவான்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய சின்ன சின்ன தவறுகளால் வெற்றியை நழுவவிட்டது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்த நிலையில், கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் என மூவர் சதம் விளாசினர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ரிஷப் பந்த் சதம் விளாசி சாதனை படைத்தார்.

இருப்பினும், இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் விளையாடி 371 ரன்களை சேஸ் செய்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையும் படைத்தனர். அசத்தலாக விளையாடிய பென் டக்கெட் சதமும், ஜோ ரூட் அரைசதமும் விளாசினர்.

ரிஷப் பந்த்.

இந்திய அணித் தரப்பில் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 134 மற்றும் 118 ரன்கள் குவித்திருந்தார். இருப்பினும், அவரது உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போனது.

இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் விளாசியவர்களில் டிராவிட்டுக்கு(6 சதங்கள்) அடுத்த இடத்தை, சச்சின், வெர்சங்கர்(தலா 4 சதங்கள்) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரிஷப் பந்த்.

ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 8 சதங்கள் விளாசியுள்ளார். இதில், 6 சதங்கள் செனா நாடுகள் எனக் குறிப்பிடப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அடிக்கப்பட்டவை.

இந்தியாவுக்கு வெளியே சதம் விளாசிய ஒரு போட்டிகளில்கூட இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற சோகமான வரலாறுக்கு ரிஷப் பந்த் சொந்தக்காரர் ஆகியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

மே.இ.தீ. அபார பந்துவீச்சு: ஆஸி. 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.... மேலும் பார்க்க

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆஸி. பேட்டிங்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.முதல் டெ... மேலும் பார்க்க

100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி? ஜியோ ஹாட்ஸ்டார் சிஇஓ விளக்கம்!

ஐபிஎல் போட்டிகளின்போது 100 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது எப்படி என ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் & லைவ் எக்ஸ்பிரீயன்ஸ் சிஇஓ சஞ்சோக் குப்தா பேசியுள்ளார். ஐபிஎல் 2025-இல் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முத... மேலும் பார்க்க

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப்பை தேர்வு செய்யுங்கள்: மஞ்ச்ரேக்கர்

ஷர்துல் தாக்குரை நீக்கிவிட்டு குல்தீப் யாத்வை தேர்வு செய்யுங்கள் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மே.இ.தீ., ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில்... மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: உச்சத்துக்கு முன்னேறிய ரிஷப் பந்த்!

இந்திய வீரர் ரிஷப் பந்த் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்துக்கி முன்னேறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆண்டர்சன்... மேலும் பார்க்க