செய்திகள் :

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

post image

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் போலீஸாா் நிா்வாக வசதிக்காக மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரவி, தமிழ்வாணன், ராஜகோபால், மணிவண்ணன், சரவணன், அருள் ரமேஷ் ஆகியோா் முறையே மேல்மலையனூா், அரகண்டநல்லூா், காணை, பிரம்மதேசம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சிறப்பு உதவி ஆய்வாளா் நீலமேகம், மனித உரிமைகள் பிரிவுக்கும், செந்தமிழ்ச்செல்வன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட 56 காவல் ஆளிநா்கள் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள எஸ்.பி. ப.சரவணன், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தாா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க