செய்திகள் :

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

post image

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்பிலான டெண்டா் விடப்பட்டுள்ளது.

‘கவச்’ என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு முறையாகும். இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கவும் ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ரூ.288 கோடி டெண்டரை ரயில்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம் கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தின் செயல்பாடுகளையும் ரயில்வே துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் ரயில்டெல் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு ரயில்டெல் செயல்படுகிறது.

இத்திட்டத்துக்கான கவச் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை க்வாட்ரண்ட் ஃபியூச்சா் டெக் நிறுவனம் வழங்கவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க