செய்திகள் :

78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!

post image

நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலாறு ஹதி என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள 75 வீடுகளுக்கு முதல்முறையாக மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மறைந்த வீரப்பன் இரு மாநில காவல்துறையினரிடம் இருந்து மறைந்து வாழ்கிராமங்களில் ஒன்று பாலாறு ஹதி. பாலாறு கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு மின்சாரம் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், மின்சார கம்பங்கள், வயர்களால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தனர்.

இதனால், இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்குகளையே இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். சேலம் மாவட்டம் கோவிந்தபாடி, கொளத்தூர் மற்றும் அருகாமை கிராமங்களில் இருந்து கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் வாங்கியும் பயன்படுத்தி வந்தனர்.

இருப்பினும், இருட்டின் காரணமாக தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளால் கிராம மக்கள் பாதித்து வந்தனர்

இதையும் படிக்க : சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

இதேபோன்று, 22 கிராமங்கள் இப்பகுதியில் இருக்கும் நிலையில், அனைவரும் ஒன்று திரண்டு பலகட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரூ. 41 கோடியில் மின்விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது, நிலத்தடி மின் கேபிள்கள் அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, அதற்கான பணிகள் நிறைவடைந்து, பாலாறு ஹதி கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அனைத்து கிராமங்களுக்கும் நிலத்தடி மின் கேபிள்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்க வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள... மேலும் பார்க்க

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க