செய்திகள் :

86 ஆயிரம் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்! - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர்,

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்!

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!" என்று பதிவிட்டுள்ளார்.

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று(பிப். 10) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க

அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 11) சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை அதிரடி உயர்வுஅமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியே... மேலும் பார்க்க