செய்திகள் :

Aamir Khan: ``எனக்கும் சல்மான் கானுக்கும் அதே ஆசைதான்'' - சொல்கிறார் ஆமீர் கான்

post image

தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்குத் தனது புதிய துணையை அறிமுகப்படுத்தியிருந்தார் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தான அப்டேட்டையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் `மகாபாரதம்' கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என ஆமீர் கான் கூறியிருந்தார். அது குறித்துப் பேசிய அமீர் கான், ``மகாபாரதம் திரைப்படத்திற்கான பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். அதற்காக ஒரு குழுவை ஒருங்கிணைத்து படத்திற்கான எழுத்துப் பணிகளைத் தற்போது தொடங்கியிருக்கிறோம்.

ஆமீர் கான்

முதலில் இந்தக் களம் எப்படி செல்கிறது எனப் பார்ப்போம். அதன் பிறகே அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கவிருக்கிறேன். " என்றார். கடந்த 1994-ம் ஆண்டு ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான `அன்டஸ் அப்னா அப்னா' திரைப்படம் இன்றுவரை கல்ட் திரைப்படமாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் சுற்றி வந்தன. அது குறித்து ஆமீர்கான் பேசுகையில், `` `அன்டஸ் அப்னா அப்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நடக்க வேண்டும் என நான் ஆவலாக இருக்கிறேன். இயக்குநர் சந்தோஷியிடம் அத்திரைப்படத்திற்கான கதையைத் தயார் செய்வதற்குச் சொல்லியிருக்கிறோம். இந்த இரண்டம் பாகத்தை பண்ண வேண்டும் என எனக்கும் சல்மான் கானுக்கும் விருப்பம் இருக்கிறது" என்றவரிடம், `` சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் என பாலிவுட்டின் மூன்று கான்களும் இணைந்து நடிப்பீர்களா ?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு, `` சரியான கதை அமைந்தால் நாங்கள் ஏன் பண்ணக்கூடாது?'' எனக் கூறினார்

ஆமீர் கான்

ஆமீர் கான் நடித்திருக்கும் `சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. 2007- ம் ஆண்டு ஆமீர் கான் நடிப்பில் வெளியான `தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் சீக்குவல்தான் இத்திரைப்படம்

Mannat : தாஜ்மஹால் போல... தன் ராணிக்காக மன்னர் கட்டிய `மன்னத்’ பங்களா - ஷாருக்கான் வாங்கியது எப்படி?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் கடற்கரையோரம் வசிக்கும் மன்னத் பங்களா மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். இக்கட்டிடத்தை பார்க்கவே தினமும் ஏராளமானோர் அங்கு வருகின்றனர். அவர்கள் மன்னத் கட்டிடத்திற்கு வ... மேலும் பார்க்க

Aamir khan : `அன்பான லைஃப் பார்ட்னரை தேடியபோது..!' - ஆமீர் கானிடம் காதலில் விழுந்தது குறித்து கெளரி

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து அவர்களை திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் ஆமீர் கான் தனித்து வாழ்ந்து வந்தார். தற்போது தனது 6... மேலும் பார்க்க

Aamir Khan: `25 ஆண்டுகள் நட்பு; லிவ் இன் உறவு, காதல் வாழ்க்கை...' -புதிய துணை குறித்து ஆமிர் கான்

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக செய்தி வெளியானது. அதனை ஆமிர் கானும் உறுதிபடுத்தினார். ஆமிர் கான் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நேற்று இரவே தனது க... மேலும் பார்க்க

அமீர் கான் வீட்டுக்கு வந்த ஷாருக், சல்மான் - களைகட்டிய 60-வது பிறந்தநாள் பார்ட்டி!

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நாளை 60வது பிறந்த நாளாகும். இப்பிறந்தநாளை ஆமீர் கான் தனது பாலிவுட் நண்பர்களுடன் சேர்ந்து முன்கூட்டியே கொண்டாடி இருக்கிறார். இதற்காக நேற்று இரவு நடிகர் சல்மான் கான், நடிக... மேலும் பார்க்க

Nadaaniyan Review: காதலனாக நடிக்க வரும் ஹீரோ; `நட்புக்காக' நாயகி - வொர்க் ஆகிறதா இந்த லவ் ஸ்டோரி?

டெல்லியிலுள்ள சர்வதேசப் பள்ளியில் படிக்கும் பணக்கார வீட்டுப்பெண் பியா ஜெய்சிங்குக்கு (குஷி கபூர்). பெற்றோரைவிட, சிறுவயதிலிருந்தே சகோதரிகளைப்போல ஒன்றாகப் பழகிய தோழிகள்தான் உயிர்; உலகமாக இருக்கிறார்கள்.... மேலும் பார்க்க

Kaun Banega Crorepati: ஓய்வு பெறும் அமிதாப்? - கோன் பனேகா குரோர்பதியை நடத்தப் போவது யார்?!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 2000ம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன... மேலும் பார்க்க