செய்திகள் :

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

post image

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடத் தொடங்கிவிட்டனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாமல் இருந்தனர்.

நேற்று முன்தினத்தோடு (ஜூன் 3) இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் நிறைவுற்றதால், மீதமிருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் இங்கிலாந்து புறப்படத் தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

அதில், ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய கம்பீர், "ரோடு ஷோ மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை.

2007-ல் (டி20 உலகக் கோப்பை) நாங்கள் வெற்றிபெற்ற பிறகுகூட ரோட் ஷோ வேண்டாம் என்று நான் கூறினேன். மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எப்போதும் இதைத் தொடர்ந்து கூறுவேன்.

கம்பீர்
கம்பீர்

இனிவரும் காலங்களில் நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அரங்குகள் அல்லது மைதானத்தில் இதை செய்ய வேண்டும்.

நடந்தது மிகவும் துயரமானது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

ரோடு ஷோ-வை நம்மால் கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்." என்று கூறினார்.

Eng vs Ind: "இங்கிலாந்தில் இது நடந்தால் கோலி மீண்டும் டெஸ்ட்டுக்கு வருவார்" - கிளார்க் கூறுவது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்தத் தொடரில், விராட் கோலியின் இடத்தை நிரப்புவது யார் என்பதே மிகப்பெரிய எதிர... மேலும் பார்க்க

Kohli: ``அவர் அதை உணர்ந்துவிட்டார்!'' - கோலியின் ஓய்வு குறித்து ஆஸி முன்னாள் கேப்டன்

இந்தியா மட்டுமல்லாது உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கேப்டன் விராட் கோலி. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத கோலி, கடைசியாக விளையாடிய ... மேலும் பார்க்க

TNPL 2025 - பேட்டிங், பௌலிங்கில் அசத்தல்... திருப்பூரை வீழ்த்திய சேப்பாக்!

திருப்பூர் தமிழன்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிருப்பூர் தமிழன்ஸ் அணிதிரு... மேலும் பார்க்க

'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி - TNPL 2025

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிதிண்டுக்கல் டிராகன்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ் அணிலைகா கோவை கிங்ஸ... மேலும் பார்க்க

Pujara: ``புஜாராவை எப்படி அவுட்டாக்குவது?'' - சிறுவயது நினைவுகளைப் பகிரும் கேப்டன் ரோஹித்

இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, 'தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (ஜூன் 5... மேலும் பார்க்க

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' - ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந... மேலும் பார்க்க