செய்திகள் :

Brij Bhushan: பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு; போலீஸ் அறிக்கையை ஏற்ற நீதிமன்றம்!

post image

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.

தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகும் போராட்டங்களுக்குப் பிறகும்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பிரிஜ் பூஷன் மீது புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.

பிரிஜ் பூஷன் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனைகள், வீரர்

அதில் ஒன்று, தனது மகள் மைனராக இருந்தபோது பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனையின் தந்தை புகார் அளித்திருந்தார்.

இருப்பினும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு (ஜூன்), அந்தப் பெண் தனது வாக்குமூலத்தின் ஒரு பகுதியாக, ஒரு மாஜிஸ்திரேட் முன் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றார்.

அதனால், புகார்தாரர் வாபஸ் பெறுவதற்கான முடிவு கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்டதா என்பதை விசாரிக்க ஜூலையில் மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதையடுத்து, ஆகஸ்டில் அடுத்தடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணைகளில் திருப்தி அடைந்து, வழக்கு விசாரணையை முடித்து வைக்க புகார்தாரர் தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்த நிலையில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் சிறப்பு POCSO நீதிபதி கோமதி மனோச்சா முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில், விசாரணையில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு, பிரிஜ் பூஷனை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட 500 பக்க அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு, நீதிபதி கோமதி மனோச்சாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரிஜ் பூஷன் மீதான இந்த போக்சோ வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க