செய்திகள் :

Chahal: "என்னையும், என் திறமையையும் நாம் நம்புகிறேன்" - வெற்றியின் ரகசியம் சொல்லும் ஆட்ட நாயகன் சஹல்

post image

சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே குவித்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

சஹல்
சஹல்

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மனஉறுதி மேலும் அதிகமாகும்

விருது வென்றபின் பேசிய சஹல், "இந்த வெற்றி என்பது அணியின் கூட்டு முயற்சி. முதலில் நாங்கள் நேர்மறையாக இருக்க விரும்பினோம். மேலும், பவர்பிளேயில் 2, 3 விக்கெட்டுகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். எதிரணி ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது அது நன்றாகத் திருப்புவதை நாங்கள் பார்த்தோம். அது எங்களுக்கும் உதவியது. நான் பந்துவீசும்போது முதல் பந்தே திரும்பியது. ஸ்ரேயாஸ் என்னிடம் வந்து ஸ்லிப் வேண்டுமா என்று கேட்டார். நாங்கள் குறைவான ரன்கள் அடித்ததால், விக்கெட் எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். கடந்த போட்டியில் நான் 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தேன்.

சஹல்
சஹல்

ஆனாலும், என்மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. என்னையும், எனது திறமையையும் நானே ஆதரித்தேன். பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. பந்தின் வேகத்தை மாற்றிக் கொண்டே இருந்தேன். அதை அவர்கள் அடிக்க வேண்டும் என்றால், அதற்கான முயற்சியை அவர்கள் செய்ய வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் வெற்றிபெறும்போது, அணியின் மனஉறுதி மேலும் அதிகமாகும். பஞ்சாப் அணிக்காக என்னுடைய முதல் ஆட்ட நாயகன் விருது இது. என்னுடைய திறமைகளை நானே ஆதரித்து, என்னை நான் முழுமையாக நம்பினால் வெற்றிபெறுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

CSK: `பிளெமிங் உட்பட அணி நிர்வாகம் செய்த மிஸ்டேக்’ - சிஎஸ்கே செயல்பாடு குறித்து ரெய்னா அதிருப்தி

சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்... மேலும் பார்க்க

BCCI ஒப்பந்தம்: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு; பட்டியலில் நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில் 2... மேலும் பார்க்க

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

இன்றைக்கு கிரிக்கெட் உலகே பிசிசிஐயின் கையில்தான் இருக்கிறது எனலாம். பிசிசிஐ இத்தனை அதிகாரமிக்க கிரிக்கெட் போர்டாக மாறியதற்கு ஐ.பி.எல்லுமே ஒரு முக்கியக் காரணம்தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்கி... மேலும் பார்க்க

IPL 2025 : 'அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை, அவர்...' - ரோஹித் பற்றி ஹர்திக் சொன்னது என்ன?

நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற... மேலும் பார்க்க

IPL 2025: ``எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தீங்க..'' - விராட் கோலி ஓப்பன் டாக்

நேற்றையப் (ஏப்ரல் 20) போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓ... மேலும் பார்க்க

Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக்கும் கைஃப்

ராஜஸ்தான் அணிக்கெதிராக லக்னோ அணி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) விளையாடிய போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மொத்தமாக 180 ரன... மேலும் பார்க்க