செய்திகள் :

DC vs RCB: 'ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விராட் கோலி..!' - ஆட்டநாயகன் க்ருணால் பாண்டியா

post image

ஐ.பி.எல் தொடரில் நேற்று(ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

க்ருணால் பாண்டியா சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி இருந்தார். அவர் 47 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

rcb vs dc
rcb vs dc

விராட் கோலி ஆதரவாக இருந்தார்

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய க்ருணால் பாண்டியா, “ஆரம்பத்தில் பேட்டிங் ஆட கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு விராட் கோலி ஆதரவாக இருந்தார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

அவருடன் இருந்தால் களத்தில் ரன்கள் சேர்க்க சுலபமாக இருக்கும். ஒரு பந்துவீச்சாளராக, எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சை மேம்படுத்த தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

rcb
rcb

அதனால் தான், நீங்கள் என்னிடம் மாற்றங்களைக் காண்கிறீர்கள். பேட்ஸ்மேன்களின் பலத்தைப் புரிந்துக்கொண்டு, அதை எனக்கே சாதகமாக மாற்ற முயற்சி செய்கிறேன். அதேசமயம் என்னுடைய பேட்டிங் திறனும் மேம்பட்டு வருகிறது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

IPL 2025 : பட்டையைக் கிளப்பும் Uncapped பிளேயர்ஸ்; தயாராகும் எதிர்கால இளம்படை | Uncapped 11

இன்றைய தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் மிகப் பெரும் பாதையை ஏற்படுத்தித்தரும் ஊடக வெளிச்சம் மிக்க தொடராக இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஹால், குல்தீப்... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: ``வைபவ் ஆட்டத்துக்குப் பின்னால் இருக்கும் இந்த 4 விஷயங்கள்'' - புகழும் சச்சின்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் காணாத ஒரு ஆட்டத்தை 14 வயது சிறுவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற குஜராத் vs ராஜஸ்தான் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜரா... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'வைபவ்வை சச்சினோடு ஒப்பிடாதீர்கள்! - ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர்

'ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அதில், ராஜஸ்தானை சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் ச... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'எனக்கு எந்த பயமும் கிடையாது!' - சதத்தைப் பற்றி வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயதே ஆன சிறுவரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்திருந்... மேலும் பார்க்க

RR v GT: ஆட்டம் காட்டிய 'பாஸ் பேபி' சூர்யவன்ஷி, அரண்டு போன குஜராத்! - என்ன நடந்தது?

தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள்... கேப்டன் சஞ்சு சாம்சன் காயம்... வெற்றிபெற்றிருக்க வேண்டிய 2 போட்டிகளைக் கோட்டை விட்டது என சுழலில் சிக்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று தோற்றால் மொத்தமாக பிளே-ஆஃப் க... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது சிறுவன்

'அசத்தல் வைபவ் சூர்யவன்ஷி!''Everyone is a spectator here!' இந்த வர்ணனைதான் கமெண்ட்ரியில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. ஆம், வைபவ் சூர்யவன்ஷி ஒற்றைக் காலை க்ரீஸூக்குள் ஊன்றி அடித்த பெரிய சிக்சர்களும... மேலும் பார்க்க